“ தூரிகையின் தூறல்கள் “ ஓவியக் காட்சி தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் இடம்பெற்றது - படங்கள்
மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரி சித்திரப்பாட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களின் ஓவியக் காட்சி நேற்று இடம்பெற்றது ,
மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியில் வருடந்தோறும் நடாத்தப்படும் சித்திரப்பாட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களின் “ தூரிகையின் தூறல்கள் “ஓவியக்காட்சி தேசிய கல்விக் கல்லூரி பீடாதிபதி எஸ் .ராஜேந்திரன் தலைமையில் இன்று கல்லூரியில் இடம்பெற்றது .
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய பயிற்சி கலாச்சாலை அதிபர் எ .எஸ் . யோகஜாரா மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கல்விவியும் தரம் மேம்பாடும் உப பீடாதிபதி திருமதி எம் .புவனேஸ்வரி ,நிதியம் நிர்வாகமும் எஸ் . ஜெயகுமார் ,தொடருறு கல்வி உப பீடாதிபதி ஜுனைட், சித்திரபாட விரிவுரையாளர் சி .கதாரதன் மற்றும் சித்திரப்பாட நெறி ஆசிரியர்ப் பயிலுனர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
ஆரம்ப நிகழ்வாக நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களினால் அதிதிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஓவியக் காட்சி கூட்டத்தினை அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது .
மனிதனின் வாழக்கை வட்டத்தையும் , அவனது இயல்பு குணங்களையும் , இயற்கை காட்சியினையும் மையப்படுத்தி ஓவியமாக தமது ஆற்றல்களை வெளிபடுத்தியுள்ள தாழங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் இரண்டாம் வருட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களின் ஓவியக் காட்சியினை பார்வையிட்டனர் .
இந்த நிகழ்வில் பீடாதிபதிகள் , விரிவுரையாளர்கள் , சித்திரப்பாட நெறி முகிழ் நிலைப்பயிலுனர்கள் மற்றும் இப்பகுதி பாடசாலைகளின் மாணவர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வில் உரையாற்றிய கல்லூரி பீடாதிபதி தெரிவிக்கையில் மனிதர்கள் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் . இவ்வாறான நிலையில் இந்த நுண்கலைகள் மனிதனின் அமைதிக்கு மிக அவசியமான ஒரு கலையாக உள்ளது .
இந்த ஓவியகாட்சியின் மூலமாக உலகத்தில் உள்ள பிரச்சினைகள் ,நமது நாட்டில் ,பிரதேசத்தில் மற்றும் சமூக மட்டத்தில் இருக்கின்ற மக்களின் பிரச்சினைகள் சரியான முறை விளங்கி கொள்வதற்கு இவ்வாறான கலைபடைப்புகள் அவசியமானது .
கலைஞ்சனுக்கு பல சமூக பொறுப்புக்கள் உண்டு எனவே இந்த சித்திரப்பாட பயிலுனர்கள் ஓவிய கலையினை திறன்பட கற்று இந்த நாட்டிலே இருக்கின்ற மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் போது சிறந்த சமூகத்தையும் ,சிறந்த கலைஞ்சனையும் உருவாக்க முடியும் .
அதற்கான முதல் படிகற்களாக அமையபெற்ற இந்த ஓவியக் காட்சி சிறப்பாக முறையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த பீடாதிபதி நெறி முகிழ் நிலைப்பயிலுனர்களுக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார் .



