போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்
“ மைத்திரி ஆட்சி நிலையான நாடு “ போதைப்பொருளிலிருந்து விடுபட்ட நாடு போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 2016 நாடளாவியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் நாடளாவியல் ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
இதன் ஒரு திட்டம் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக இணைந்து விசேட மாதிரி கிராம போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை திராய்மடு கிராமசேவை பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 2016 “ போதையற்ற கிராமங்கள் உருவாக்க உறுதிபூணுவோம் “ எனும் தொனிப்பொருளில் ஆரம்ப நிகழ்வு இன்று திராய்மடு கிராம சேவை பிரிவில் இடம்பெற்றது .
இதன் போது போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு அறிவூட்டல்களும் தொடர்ந்து வீடு வீடாக சென்று போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் , ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டது .
இந்நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்கள மாவட்ட பணிப்பாளர் பி .குணரட்ணம், மாவட்ட செயலக திவிநெகும முகாமையாளர் எம் . மனோகிதராஜ் , திவிநெகும திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே . நிர்மலா. ,மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் . எஸ் . விஜெகுமார் ,இருதயபுரம் வங்கி முகாமையாளர் திருமதி .கே .சுவந்தினி , இருதயபுரம் வலய உதவியாளர் .டி .பிரபாகரன் , வலய திவிநெகும உத்தியோகத்தர் இ .காண்டீபன், கிராம சேவை உத்தியோகத்தர் எ .நேசதுரை மற்றும் திராய்மடு கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,சமுர்த்தி சங்கங்களில் பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்,



