அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக சிவில் மற்றும் அரச சார்பற்ற நிருவனங்ககளின் மூன்றாவது கலந்துரையாடல்
அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் இணையத்துடன் இணைந்து கடந்த சில நாட்களாக செயல்படுத்தப்பட்ட மக்களின் கருத்து கணிப்பு தொடர்பான இறுதி கலந்துரையாடல் எகெட் கரித்தாஸ் நிறுவன அனுசரணையில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
தற்போது பேசப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் சம்பந்தனான மட்டக்களப்பு மாவட்ட சிவில் மற்றும் அரச சார்பற்ற நிருவனங்ககளின் சிபாரிசுகள் பற்றிய மூன்றாவது கலந்துரையாடல் இன்று இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 80 அரச சார்பற்ற பிரதிநிதிகள் பங்கு பற்றி உள்ளீடுகள் வழங்கப்பட்டன .
இந்நிகழ்வில் பெபரெல் அமைப்பை சேர்ந்த எம் . ரிசாட் , எப் . ஸ்டான்லி ஆகியோர் வளவாலர்களாக கலந்துகொண்டனர் .
அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 20 ஆலோசனைகளை முன்வைத்து இன்றைய கலந்துரையாடல்கள் மற்றும் குழு வேலைகள் இடம்பெற்றன . இதில் முக்கிய விடயங்களான 1 அடிப்படை உரிமைகள் ,2 ஆட்சி முறை ,3 நீதித்துறை, 4 தேர்தல் முறைமை .5 அதிகார பகிர்வு, 6 இனம், மதம் , மொழி போன்றவை பேசப்பட்டன .
இன்று கலந்துரையாடப்பட்ட தொகுப்புகள் எதிர் வரும் 25 ஆம் 26ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள யாப்பு சீர்திருத்த குழு கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளன .
இன்று இடம்பெற்ற நிகழ்வு மட்டக்களப்பு எகெட் கரிதாஸ் நிறுவன இணைப்பாளர் அருட்பணி ஜெரோம் டிலிமா தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற பிரதிநிகளும் , கொழும்பு பெபரல் அமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .