Breaking News

விழாம்பழம் பொறுக்க சென்ற வயோதிப பெண் யானை தாக்கி மரணம் !!

திருகோணமலையின் சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு, தங்கபுரம் கிராமத்தில் இன்று(21) காலை 05 மணியளவில், காட்டு யானையின் தாக்குதலினால் வயது 64 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வெளியில் சென்று திரும்பும் வழியில் விழா மரம் ஒன்றின் கீழ் விழாம்பழம் விழுந்து கிடப்பதை கண்டு அதனை பொறுக்க சென்ற வேலையில் அம்மரத்துக்கு அருகில் நின்றிருந்த யானை தக்கியதாலே குறித்த மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.