Breaking News

நீ என் பொண்ணுடா ! கண்ணீர் விட்ட ஒரு அன்பு அப்பா!

கோடம்பாக்கம் முழுக்க பேச்சு அதுதான்… யார் கூடினாலும் அது தான் பேச்சு. வரலட்சுமி, விஷால் காதல் முறிந்தது என்று செய்தி பரவியதுமே தமிழ் திரையுலகினர் பலர் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்கள்.

என்ன இருந்தாலும் பெரிய குடும்ப பாரம்பரியம் உள்ளவர் சரத் குமார்.  அவர் நடித்து தான் சாப்பிட வேண்டும் என்று அவசியமே இல்லை. பத்திரிகை ஒன்றை துவங்கி ராஜா போல் இருந்திருக்கலாம்.

அல்லது படத் தயாரிப்பாளர் ஆகி மிடுக்காக உட்கார்ந்திருக்காலம். நடிகர் சங்க தலைவராக சத்தமிலாமல் செய்த உதவிகள் ஏராளம்.

நல்ல நிர்வாகியும் கூட. அவருக்கு இப்படி ஒரு இறங்கு முகம் வரும் என்று அவரே எதிர் பார்த்திருக்க மாட்டார்.

அதுவும் தன் பாசத்திற்குரிய மகள் விரலை எடுத்தே தன் கண்ணைக் குத்துவார்கள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

கடும் மன உளைச்சலில் இருந்தார் சரியாக சாப்பிட அவரால்  இயலவில்லை. இந்த நேரத்தில் தான் அப்பா தான் முக்கியம், அப்பாவின் கெளரவம் தான் முக்கியம் என்று ஒரு முடிவெடுத்தார் அன்புமகள்.

இது ஒன்று போதும் சரத்குமாருக்கு..! இனி மீண்டும் கம்பீரமாக எழுந்து வருவார். பழைய கம்பீர சரத்தை இனி பார்க்கலாம் என்கிறார்கள்.