புத்தர் சிலை உடைப்பு வழக்கில் பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் இணைய மறுப்பு!
கிளிநொச்சியில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை வழக்கில் விசாரணையில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவில் இணையவே பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பங்கேற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையையும் கிளிநொச்சி சம்பவத்தனை முழுமையாக விசாரணை செய்யக் வேண்டியும் கோரியும் தர்ஷன வெரதுவகே என்பவரால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.