வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கயர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் !!
வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற எம்மவர்களும் ஓய்வூதியம் பெறும்வகையில் ஓய்வூதியத் திட்டம் ஒன்றை எதிர் வரும் ஜனவரி 8ம் தொடக்கம் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த திட்டமானது ஜனவரி 8ம் திகதி ஆரம்பிக்க படாவிட்டாலும் எதிர்வரும் ஆண்டின் முதல் 3 மாதங்களுக்குள் நிட்சயமாக அமுலாகுமெனவும் வழிநாட்டு பணியாளர்களின் குடும்பங்களுக்கென நலன்புரித் திட்டம் மற்றும் பணியாளர்கள் அந்த நாடுகளில் ஆரம்பிக்கும் வங்கி கணக்குகளுக்கு 2.5 வீத வட்டியை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.