Breaking News

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் வசதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கான குடிநீர் வசதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு தமது தேவைகள் நிமித்தம்  வருகை தரும் பொதுமக்கள் எதிர் நோக்குகின்ற  குடிநீர் பிரச்சினை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்களின்  கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்கு  இணங்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் வழங்கப்பட்ட  குடிநீர் இயந்திரம் இன்று பொதுமக்களின் குடிநீர் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்த குடிநீர் இயந்திரத்தினை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா (17)  செவ்வாய்கிழமை  பிற்பகல் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்கள். மண்முனை வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(லியோன்)