Breaking News

சூதாட்ட புகாரில் சிக்கிய சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை!

ஐபிஎல் சூதாட்ட புகார்களில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மீது புகார்கள் எழுந்து வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம், குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரின் மீது எழுந்துள்ள புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது என அறிவித்தது.

இந்நிலையில் இவர்களுக்கான தண்டனை விவரங்களை லோகா தலைமையிலான உச்சநீதிமன்ற குழு இன்று அறிவித்தது.  இதில் சென்னை சூப்பர் கிங்சின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவருக்கு கிரிக்கெட் விவகாரங்களில் பங்கேற்க வாழ் நாள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள்  ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.