பாடசாலை நேரங்களில் இடம்பெறும் தனியார் வகுப்புகளுக்கு தடைவிதிக்கும் சட்டமூலம் மிக விரைவில்.
பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் நடைபெறும் நேரங்களில், தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு தடைவிதிக்கும் யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாடசாலை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போதே, தனியார் மேலதிக வகுப்புகள் நடத்தப்படுகின்றமை குறித்த பல முறைபாடுகள் கிடைத்துள்ளதகவும் இதனால் மாணவர்களின் பாடசாலை வரவு வெகுவாக குறைவடைவதாகவும் அவர் குறிபிட்டார்.
இதனை தடுப்பதற்கான யோசனை அடங்கிய அறிக்கை விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சட்ட மூலமாக சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.