Breaking News

பேஸ்புக்கில் குழந்தையின் பெயரை மாற்றி போட்டதால் மனைவியை தாக்கிய கணவன்

மலேசியாவின் பினாங் நகரை சேர்ந்த பெண் ஸ்டெல்லா ஓய். ஸ்டெல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குழந்தையின் படத்தை போட்டு அதில் கணவரின் பெயருக்கு பதிலாக டத்தோ லீ என்று வேறு ஒருவர் பெயரை போட்டு விட்டார். இதை பார்த்த கணவர்  மனைவியை அடித்து உதைத்து உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா இது குறித்து போலீசில் புகார் கூறி உள்ளார். மேலும் பேஸ் புக்கத்தில் தான் படுகாயமடைந்த பல படங்களை பதிவு செய்து உள்ளார்.

இது குறித்து ஸ்டெல்லா தனது பேஸ் புக் பக்கத்தில் இது குறித்து கூறி இருப்பதாவது:-

தற்போது எனது காயங்கள் குணமடைந்து வருகிறது. இதுகுறித்து போலீசில் புகார் கூறப்பட்டு உள்ளது.நானும் எனது கணவரும் இனி நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வது கடினம் என கூறி உள்ளார். இந்த டத்தோ லீ தனது நண்பர் மற்றும் பேஸ் புக் நண்பர் என கூறி உள்ளார்.