Breaking News

யாழில் இடம்பெற்ற அரச நிகழ்வுகளைப் விக்கி! புறக்கணித்தமையால் தொடரும் விரிசல்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், மைத்திரிபால அரசாங்கத்துக்கும் இடையில் கொள்கை மற்றும் அரசியல் ரீதியான விரிசல்கள் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.வி்க்னேஸ்வரன், கொழும்புடன் அரைமனதுடன் -மேலோட்டமான நல்லுறவை பேணும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற தேசிய நல்லிணக்கப்பொ றிமுறைக்கான ஆலோசனை செயலணியின் ஆரம்ப நிகழ்வின்போது வடமாகாண முதலமைச்சர் பங்கேற்கவில்லை. இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் அதற்கு முதல் நாளான, கடந்த வியாழக்கிழமையன்று மங்கள சமரவீரவினால் யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட இராப்போசன விருந்திலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

அத்துடன் மற்றுமொரு நிகழ்வாக வடமாகாண ஆளுனர் அவர்கள் எச்எம்.ஜி.எஸ் பாலிஹக்கார அளித்த பிரியாவிடை தேனீர் விருந்தில் பங்கேற்றவேளை ஐந்து நிமிடங்களிலேயே அங்கிருந்து வெளியேறியிருந்தார் என்றும் இவ்விந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது