Breaking News

புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு

(என்டன்)
மட்டக்களப்பு   புளியடிக்குடா  புனித  செபஸ்தியார்  ஆலய  வருடாந்த திருவிழா  திருப்பலி  எதிர்வரும்  24.04.2016  ஞாயிற்றுக் கிழமை  காலை  07.00 மணிக்கு   திருகோணமலை  மறை மாவட்ட  ஆயர்  கிறிஸ்டியன்  நோயல் இமானுவேல்   தலைமையில்  ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு  மறை  மாவட்டத்தின்  புளியடிக்குடா  புனித  செபஸ்தியார் ஆலய  வருடாந்த திருவிழா கொடியேற்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை  05.15 மணியளவில்   பங்குதனத்தை  லோரன்ஸ்  தலைமையில் இடம்பெற்றது .
கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து திருச்செபமாலையும்  விசேட திருப்பலியும்  இடம்பெற்றது .
ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு அருளுரைகளுடன் திருப்பலியும் இடம்பெறவுள்ளது .
எதிர்வரும் 23.04.2016  சனிக்கிழமை  மாலை 05.30 மணிக்கு  புனிதரின் திருவுருவ பவனியும் அதனை தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் இடம்பெறவுள்ளது .
ஆலய வருடாந்த  திருவிழா  கூட்டுத்திருப்பலி 24.04.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு திருகோணமலை  மறை மாவட்ட ஆயர்  கிறிஸ்டியன்  நோயல்  இமானுவேல்   தலைமையில்   ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது