Breaking News

இலங்கை போக்குவரத்து சபையின் 500 பழைய பஸ்களை திருத்தி மக்களின் பாவனைக்கென வழங்க தீர்மானம்

போக்குவரத்து அமைச்சானது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 500 பழுதடைந்த பழைய பஸ்களை திருத்தி மக்களின் பாவனைக்கென வழங்க தீர்மானனித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய அரசினது நிதி உதவியுடன் தொடரூந்து மற்றும் பேரூந்து சேவைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தின் அடிப்படையிலே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கூறியுள்ளார்.

இவ்வாறு திருத்தப்படும் 500 பஸ்களுக்கான இயந்திர உத்தரிப்பாகங்களையும் கட்டமைப்புகளையும் இந்தியாவிலிருந்து பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.