Breaking News

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு ஏற்படும் மர்மமான நோய் தொடர்பிலான மருத்துவ பரிசோதனை !

புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளிற்கு அண்மைக்காலமாக ஏற்படுவதாக கூறப்படும் இதுவரை இனங்காணப்படாத மர்மமான நோய் தாக்கத்தினால் உயிரிழக்கின்ற சம்பவங்கள் இடம்பெறுவதால், அது தொடர்பாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம், சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடயதற்கமைவாக, உயிரிழக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்பாக கூடுதல் கவனம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப்பிரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மிக விரைவில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகளுக்கு விசேட மருத்துவ பரிசோதனைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடிய இது குறித்த செயல்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் குறித்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.