புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான கண்காட்சி
( என்டன்)
புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான கண்காட்சி
இன்று நடைபெற்றது .
இலங்கையை சேர்ந்த புலம்பெயர்வாளர்களின் வாழ்வையும் பிரயாசையையும்
அடைவுகளையும் கொண்டாடும் முகமாக புகைப்படங்கள், சித்திரங்கள், கதைகள் ,
குறும்படங்கள், போன்றவற்றை உள்ளடக்கியதாக இடம்பெற்ற கண்காட்சி புலம்பெயர்தலுக்கான சர்வதேச
அமைப்பின் கிழக்குமாகாணத்திற்கான பொறுப்பதிகாரி எம் .ஜெயராஜன் தலைமையில் புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையில் இன்று நடைபெற்றது .
இந்த கண்காட்சியில் முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பாக
மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் காலி மாவட்ட பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட
ஓவிய போட்டிகளில் தெரிவு செய்யப்பட ஓவியங்கள் ,புகைப்படங்கள் மற்றும் முறையற்ற
விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான
கானொளிகளும் இன்று இடம்பெற்ற
கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது .
இந்த கண்காட்சியினை பார்வையிடுவதற்காக அரச திணைக்கள அதிகாரிகள் ,அரச
சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர்
கலந்துகொண்டனர்