Breaking News

அமில எரிவு பிரச்சனை இருக்கா ? அதற்கு வீட்டிலேயே மருந்து இருக்கே!

அசிடிட்டி பிரச்சனை எல்லோருக்கும் ஏற்படும் சகஜமான ஒன்று. வயிற்றில் சுரக்கும் அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும்போது அவை உணவுக்குழாய் வரை மேலே வருகிறது.

அதனால்தான் அங்கே எரிச்சல் உண்டாகும், இதை தான் அசிடிட்டி என்று சொல்வோம். அசிடிட்டி வர பல காரணங்கள் உண்டு. அடிக்கடி வந்தால் வயிறு புண்ணாகி அல்சர் வந்துவிடும்.

அதனால் ஆரம்பத்திலேயே குணப்படுத்த வேண்டியது அவசியம். அசிடிட்டியை போக்க ஜீரண மருந்துகளை வாங்குவதற்கு பதில் இயற்கை மூலிகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு மருந்து நம் வீட்டிலேயே இருக்கு.

அப்படி என்ன மருந்து இருக்குனுதான கேட்குறீங்க…….?

துளசி: துளசி இலையை பறித்து நன்றாக மென்று அதன் சாறினை விழுங்குங்கள் அல்லது துளசி இலையை நீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது குடியுங்கள். இதனால் ஆசிட் அதிகமாக சுரப்பது தடுக்கப்படும்.

பெருஞ் சீரகம் : பெருஞ் சீரகம் எந்த வகை உணவையும் எளிதில் ஜீரணப்படுத்திவிடும். நெஞ்செரிச்சலை கட்டுப்படுத்தி, நிவாரணம் அளிக்கும். இந்த சோம்பினை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பலன் கிடைக்கும்.

பட்டை : பட்டை ஜீரண சக்தியை தூண்டும். அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டது. பட்டைப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம் , அல்லது தேநீரில் பட்டையை கலந்து கொதிக்க வைத்து குடித்தாலும் அசிடிட்டி குறையும்.

மோர் :மோர் மிகவும் குளிர்ச்சியானது. அதிக அமிலம் சுரப்பதை உடனடியாக கட்டுப்படுத்தும். வயிற்றிற்கு இதம் தரும். குளிர்ந்த மோரில் இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலந்து குடியுங்கள். உடனடியாக பலன் கிடைக்கும்.

கராம்பு :கராம்பு கிருமி நாசினி மட்டுமல்ல , அதிலுள்ள குணங்கள் ஜீரண சக்தியை தூண்டும். வாயுவை போக்கும். இதனால் நெஞ்செரிச்சல் உடனடியாக குணமாகும்.