Breaking News

பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில மொழித்திறன் பயிற்சி முகாம்

 (என்டன்)

பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில  மொழித்திறன் பயிற்சி முகாம் இன்று மட்டக்களப்பு  மயிலம்பாவெளியில் நடைபெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலயத்தின்  பிராந்திய  ஆங்கில வலய பிரிவினால்  பாடசாலை    மாணவர்களின்  ஆங்கில  மொழித்திறனை  அபிவிருத்தி  செய்யும்  நோக்கில்  கல்வி அமைச்சின் ஆங்கில பிரிவின் அனுசரணையுடன் மட்டக்களப்பு கல்வி வலயத்தில்  பாடசாலை மட்டத்தில் ஆங்கில  மொழித்திறன் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  மட்டக்களப்பு கல்வி வலய பிராந்திய ஆங்கில வலய நிலைய இணைப்பாளர் பெனடிக் என்டனி  ஏற்பாட்டில் அதிபர் கே சிறிதரன் தலைமையில் ஆங்கில   மொழித்திறன் பயிற்சி  முகாம் இன்று  நடைபெற்றது .

இந்த பயிற்சி முகாமுக்கு மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தினால் அனுமதி வழங்கப்பட்ட  16 பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட 06  பாடசாலைகளில் 125 மாணவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டனர் .

இந்த பயிற்சி முகாமில் ஆங்கில ஆசிரியர்களான  கி .கொன்சன்ட் டையின் , எஸ் ..எம் .ஆர் . கிரிஸ் டொஸ்டன், ஜி . முகுந்தன் ,  ஜி . ஜூட்ஸ் குமார் ஜிட்ஸ்,  எஸ் .சங்கர் , திருமதி . ஆர் சவரிராஜா ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர் .