Breaking News

பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்ட இந்திய ராணுவ வீரர் !!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாதிகளின் 7 தளங்கள் மீது இந்திய ராணுவம் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக  இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 8 பேரை சுட்டு வீழ்த்தியதாகவும், மகாராஷ்டிராவை சேர்ந்த 22 வயதாகும், சந்து பாபுலால் சவுகான் என்ற ராணுவ வீரரை பிடித்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவ தரப்பில், இந்த ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதலில் 40 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்றும், நமது ராணுவ வீரர்களுக்கு எந்தவித உயிர் சேதமும் நிகழாமல் திரும்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

அதேநேரம், சந்து பாபுலால் தவறுதலாக எல்லையை தாண்டியபோதே பிடிபட்டுள்ளதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.