Breaking News

மனைவியின் விருப்பப்படி மனைவிக்கே திருமணம் செய்து வைத்த அன்புக்கணவன் !

காதலர்கள் தோற்றாலும் காதல் தோற்று விடக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் இப்போது காதலர்கள் கொலை செய்யப்பட்டு, காதலையும் சேர்த்து கொன்று விடுகிறார்கள். அப்படி ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

ஆனால் இப்படி பட்ட காலத்திலும் காதலின் மகத்துவம் தெரிந்த ஒரு அற்புதமான மனிதனும் நம்மிடையே வாழ்கிறார்.

வாருங்கள் என்ன நடந்தது என்று பார்க்காலம்.

திருமணம் செய்த பெண் வேறொருவரைக் காதலித்ததால் முதலிரவில் அப்பெண்ணை காதலருடன் அனுப்பி வைத்துள்ளார் புதுமாப்பிள்ளை.  துவரங்குறிச்சி  அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேணி.

 சிங்கம்புணரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விஷ்வா  இருவருக்கும் திருமணம் செய்ய கடந்த 20 நாட்களுக்கு முன் நிச்சயம் நடந்தது.

அதன்பின் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு இருவீட்டாரும் விநியோகித்தனர். கடந்த 10 ஆம் தேதி காலை மாப்பிள்ளை வீட்டில் திருமணம் தடபுடலாக நடந்தது.

உறவினர்கள், நண்பர்கள் வந்து மணமக்களை வாழ்த்தினர். மாலையில் பெண் வீட்டுக்கு மறுவீடு சென்றனர். இரவு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தபின் மணமக்கள் முதலிரவு அறைக்கு சென்றனர்.

அப்போது திடீரென விஷ்வாவின்  காலில் வேணி  விழுந்து கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த விஷ்வா மணப்பெண்ணை விசாரித்தார். அப்போது வேணி  “நானும், எங்கள் ஊரை சேர்ந்த   பேக்கரி ஊழியரும்  காதலித்து வருகிறோம்.

பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துவிட்டனர். நான் வாழ்ந்தால் அவருடன்தான் வாழ்வேன். என்னை அவருடன் சேர்த்து வைக்காவிட்டால் செத்துவிடுவேன்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

விஷ்வா  விடிய ,விடிய யோசித்துள்ளார். இறுதியில் காதலனுடன், மனைவியை சேர்த்து வைக்க முடிவு செய்தார். மறுநாள் காலை இரு வீட்டாரும் கூடி பேசினர்.

அப்போது வேணியை  அவரது காதலனுக்கே திருமணம் செய்து வைப்பது என முடிவானது.

திருமண செலவுத்தொகையான 1 லட்சத்தை பெண்ணின் பெற்றோரோ அல்லது காதலனோ விஷ்வா  குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் இதுகுறித்து எழுதி வாங்க சிங்கம்புணரி  போலீஸ் ஸ்டேஷனுக்கு இரு குடும்பத்தினரும் நேற்று மாலை சென்றனர்.

ஆனால் இருவரையும் சேர்த்து வைக்க முடியுமே தவிர, தங்களால் பிரித்து வைக்க எழுதி வாங்க முடியாது என்று கூறி போலீசார் அவர்களை திருப்பி அனுப்பிவிட்டனர்.

இதனால் இரு குடும்பத்தினரும் பரஸ்பரம் எழுதி வாங்கிக் கொண்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதுகுறித்து   வெளியூர் சென்றிருந்த வேணியின் காதலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். அடுத்த நாளே சிங்கம்புணரி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார் விஷ்வா.

மணமக்கள்  இளைஞர் விஷ்வாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியபோது கூடி இருந்த அத்தனை பெரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

பின் அவர்களை வேன் ஏற்றி அனுப்பிவிட்டு விஷ்வா குமுறி அழுதார்.

அவரை தேற்றி அழைத்து சென்ற கோலம் பரிதாபமாக இருந்தது..!