Breaking News

குண்டுவெடிப்பில் பொதுமக்களை காப்பாற்றிய திருடர்கள்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டன்யில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பயங்கர குண்டு வெடிபில் 29 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகமது கான் ரஹாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், எலிசபெத் பகுதி ரயில் நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டி மீது ஒரு பை இருந்தது. அதை, 2 திருடர்கள் எடுத்து திறந்து பார்த்தபோது அதில் 5 குண்டுகள் இருந்தன.

உடனே அவர்கள் பையை கீழே போட்டுவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதில் சக்திவாய்ந்த வெடி பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், பல பேரின் உயிரை திருடர்கள் காப்பாற்றிவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.