Breaking News

சவுதி அரேபியாவில் கால்பந்து மைதானத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதல் திட்டம் முறியடிப்பு !

உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 2018-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தற்போது அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதி போட்டி சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 8 பேரை சவுதிஅரேபிய போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள். தலா ஒருவர் சூடானை சேர்ந்தவர்கள் மற்ற 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இப்போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் கார்குண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் வெடி குண்டு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாதிகளின் 2-வது தாக்குதல் சதியாகும். இதற்கு முன்பு சவுதி அரேபியாவில் குவாதிப் தமாம் ஆகிய 2 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டனர். அச்சதி முறியடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.