காயம் காரணமாக ஜிம்பாப்வே தொடரில் சன்டிமாலீனால் ஆடமுடியாது !!
இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த வாரம் ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டண் சன்டிமால் 15 பேர் கொண்ட அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்டார். காயத்தில் இருந்து அவர் இன்னும் குணமடையாததால் ஜிம்பாப்வே தொடரில் விளையாடவில்லை. உள்ளூர் போட்டியின் போது அவருக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. அணியில் 2 புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி வருகிற 29-ந்தேதி ஹராரேயில் தொடங்குகிறது.