Breaking News

அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா நிகழ்வு ஆலய அரங்கில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு  பங்குதந்தை சி .வி .அன்னதாஸ்  தலைமையில் ஆலய அரங்கில் 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை  மாலை நடைபெற்றது .

ஒளிவிழா  நிகழ்வில்  மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது 

இதனை தொடர்ந்து  மறைக்கல்வி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால்  வழங்கி வைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு சிறிய குருமட துணை அதிபர் அருட்பணி ஜெரிஸ்டன் வின்சென்  ,பெரிய உப்போடை மரியாயின் பிரான்சிஸ்கன்  மறைபரப்பு கன்னியர்மட  அருட்சகோதரிகள் ,மறைக்கல்வி  பாடசாலை ஆசிரியர்கள் ,  பெற்றோர்கள் , பங்கு மக்கள்  என  பலர் கலந்துகொண்டனர்