ரவிராஜ் கொலை வழக்கின் அனைத்து சந்தேகநபர்களும் விடுதலை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐந்து பேருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றினால் இன்று அதிகாலை 12.15 அளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்த வழக்கின் தொகுப்புடவாசிப்பின் முடிவிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது சாரதியைக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கடற்படையைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் விடுதலையளித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க தீர்ப்பளித்துள்ளார்.