Breaking News

கண்டி, நிலமேயின் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் மீட்பு

கண்டி கதிர்காமர் ஆலயத்தினது பஸ்நாயக்க நிலமேயான கெமுனு வலிசுந்தரகேயினது  வீட்டிலிருந்து, இரண்டு யானை  தந்தங்களை வன விலங்கு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இவற்றினது பெறுமதி, இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் இது குறித்த விசாரணைகளை தலதுஓயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.