மட்டக்களப்பில் பாடசாலை மாணவிகளை கடத்த முற்பட்டதாக புகார் பொலிஸார் தீவிர விசாரணை.
மட்டக்களப்பு நகரில் உள்ள இரு பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியர்கள் இருவரை கடத்த முற்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
பெற்றோர் தெரிவித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை காரில் வந்தோர் இந்த கடத்தல் முயற்சியை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இது தொடர்பில் இரண்டு பிரபல பெண்கள் பாடசாலைக்கும் சென்ற மட்டக்களப்பு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



