Breaking News

புலம்பெயர் எழுத்தாளர்களின் அனுசரணையில் 45 வது இலக்கிய சந்திப்பு‏ சத்துருக்கொண்டானில்.

புலம்பெயர் எழுத்தாளர்களின் அனுசரணையில்  45 வது இலக்கிய சந்திப்பு   பேராசிரியர் செ .யோகராசா தலைமையில்  மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  சர்வோதய மண்டபத்தில் காலை 09.00 மணியளவில் ஆரம்பமானது .

இலக்கிய சந்திப்பு நிகழ்வில் மலையகம் – வரலாறும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில்   இலங்கையின் இந்தியத் தமிழர்களும் தமிழ்நாட்டின் சிலோன்காரர்களும் ,மலையக  இலக்கியத்தின் தோற்றுவாயாக நாட்டாரியல் , மலையக புனைவு இலக்கியம் , மலையக ஆய்வு இலக்கியமும் திறனாய்வும் மற்றும் இலங்கை அரச நிர்வாகத்தில் மலையகம் சந்திக்கும் சவால்கள்  என்ற  05  தலைப்பிலான  ஆய்வுகளும்  கட்டுரைகளும்  இடம்பெற்றன .

இடம்பெற்ற இலக்கிய சந்திப்பு நிகழ்வில்  இலக்கியவாதிகளான  மல்லியப்பு சந்தி திலகர் ,மு .சிவலிங்கம் , தெளிவத்தை ஜோசப் ,லெனின் மதிவானம் , இரா .ரமேஸ் மற்றும்  பேராசிரியர்கள் , இலக்கிய ஆய்வாளர்களும் ,எழுத்தாளர்கள் ஆகியோர்  இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் .
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர்  )