Breaking News

மட்டக்களப்பில் பல்வேறு கொள்ளையுடன் தொடர்புடைய இரு மாணவர்கள் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காத்தான்குடி பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட முப்பதரைப் பவுன் தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம், என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் இவர்கள் கொள்ளையிட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் வாவியில் வீசி விட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் சுட்டிக்காட்டினர். கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த மாணவர்கள் எனவும் அதில் ஒரு சந்தேகநபர் இவ் வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர் எனவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்; இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.