கணித பாட கற்றல் மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய “ஏணி” செயலேடு மாணவர்களுக்கு வழங்கிவைப்பு.
மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம் மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிரதி கல்வி பணிப்பாளர் சசிந்திர சிவகுமார் ( திட்டமிடல் ) தலைமையில் க .பொ .த . சாதாரண கணித பாட மாணவர்களுக்கான கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது .
இக்கையேட்டினை யாழ் இந்துகல்லுரியின் 1992 ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின் ஐக்கிய இராச்சிய நிதி அனுசரணையில் கணித பாட கற்றல் மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய “ஏணி” செயலேடு சுமார் 1170 மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது . மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களின் கணித பாடத்தினை மேம்படுத்தும் நோக்கில் இக்கையேட்டினை இலவசமாக வழங்கி உள்ளனர் .
இக்கையேடுகளின் முதல் பிரதிகளை கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது .
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )