Breaking News

கணித பாட கற்றல் மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய “ஏணி” செயலேடு மாணவர்களுக்கு வழங்கிவைப்பு.

மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகம்  மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர்களின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு பிரதி கல்வி பணிப்பாளர் சசிந்திர சிவகுமார் ( திட்டமிடல் ) தலைமையில் க .பொ .த . சாதாரண கணித பாட  மாணவர்களுக்கான  கணித பாட செயலேடு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலையில் இடம்பெற்றது .

 இக்கையேட்டினை  யாழ் இந்துகல்லுரியின்  1992  ஆண்டு உயர்தர பழைய மாணவர்களின்  ஐக்கிய இராச்சிய நிதி  அனுசரணையில்  கணித பாட கற்றல் மாதிரி  வினாத்தாள்கள் அடங்கிய  “ஏணி”  செயலேடு சுமார் 1170  மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது  .  மட்டக்களப்பு பாடசாலை  மாணவர்களின் கணித பாடத்தினை மேம்படுத்தும் நோக்கில் இக்கையேட்டினை  இலவசமாக வழங்கி உள்ளனர் .

இக்கையேடுகளின்   முதல் பிரதிகளை கல்வி வலய பாடசாலை அதிபர்களுக்கு இன்று வழங்கி வைக்கப்பட்டது .
( நியூவற்றி‬ அமிர்தகழி நிருபர் )