Breaking News

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 207 வது வருடாந்த திருவிழா


(அமிர்தகழி நிருபர் )

கிழக்கிலங்கையில்   பிரசித்தி பெற்ற திருத்தலமான  சொறிக்கல்முனை  திருச்சிலுவை  திருத்தலத்தின்  207  வது வருடாந்த திருவிழா  திருப்பலி  திருகோணமலை   மறைமானில்   ஆயர்  கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவல் ஆண்டகை   தலைமையில்  பங்குதந்தை திருச்செலம் ,அருட்பணி தேவராஜ் , அருட்பணி அம்புறோஸ் , அருட்பணி குமார் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை இன்று ஒப்புக்கொடுத்தனர் .

சொறிக்கல்முனை  திருச்சிலுவை திருத்தல  வருடாந்த திருவிழா பங்குதந்தை  திருச்செல்வம் தலைமையில்  11.09.2015  வெள்ளிக்கிழமை மாலை  05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .  
திருத்தல திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும்,  பிராத்தனைகளுடன்  திருப்பலிகளும்  இடம்பெற்றது .

19.09.2015  சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு  திருத்தல  பொது நவநாள்  வழிபாடுகளும் , மறைவுரைகளும்  இடம்பெற்றதுடன்   தொடர்ந்து  நற்கருணை  பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது   .

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு    சொறிக்கல்முனை  திருச்சிலுவை  திருத்தலத்தின்  207  வது வருடாந்த திருவிழா  திருப்பலி   திருகோணமலை மறைமானில  ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவல்  ஆண்டகை   தலைமையில் பங்குதந்தை திருச்செலம் ,அருட்பணி தேவராஜ் , அருட்பணி அம்புறோஸ் , அருட்பணி குமார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு  திருப்பலியின்  பின்  திருச்சிலுவை பவணி இடம்பெற்றதுடன் தொடர்ந்து   திருத்தல திருவிழா   திருநாள்  கொடியிறக்கத்துடன்  திருத்தல  வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது  .
இன்று இடம்பெற்ற திருத்தல திருவிழா திருப்பலியில்    பல பகுதியிலிருந்து  வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு  திருத்தல திருவிழா திருப்பலியை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது  .