Breaking News

2015ஆம் ஆண்டுக்கான மாபெரும் விவசாயக் கண்காட்சியும் விற்பனையும், எதிர்வரும் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மட்டக்களப்பில்.


(அமிர்தகழி நிருபர் )

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலில், மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் 2015ஆம் ஆண்டுக்கான மாபெரும் விவசாயக் கண்காட்சியும் விற்பனையும், எதிர்வரும் 17, 18 மற்றும் 19ஆம் திகதிகளில் மட்டக்களப்பு, சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுச்சிமிகு விவசாய உற்பத்திகள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படுவதுடன், விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்வில் வட மாகாண விவசாய அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய அமைச்சர்கள், மாகாண சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய ,கால்நடை ,மீன்பிடி ,கூட்டுறவு  அமைச்சர்  துரைராஜசிங்கம் தலைமையில்  ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஊடக மகாநாடு 14.09.2015   மட்டக்களப்பு நீர்ப்பாசன திணைக்களத்தில்  இடம்பெற்றது .