பாரிய தொகை செலவிட்டு சந்திரிக்காவுக்கு சேறு பூச முயன்ற மஹிந்த தரப்பு - செய்திகள் அம்பலம்
சென்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரகலங்களில் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயகவுக்கு எதிரான விளம்பரங்களுக்கென மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பாரிய மோசடிகளுக்கேதிரான விசாரணைகளின்போது நேற்று இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னைனாள் ஜனாதிபதி சந்திரிக்கா யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டமொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிஸ்டர் பிரபாகரன் என்று கூறியிருந்தார் .
இதனை வைத்து சிங்கள மக்கள் மத்தியில் மைத்திரி- சந்திரிக்கா தரப்புக்கு எதிரான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சந்திரிக்காவின் உரையிலிருந்து மிஸ்டர் பிரபாகரன் என்ற வார்த்தைகள் அடிக்கடி தொலைக்காட்சி விளம்பரங்களாக ஒளிபரப்பப்பட்டிருந்தது.
நேற்று பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த சுயாதீன தொலைக்காட்சியின் உள்ளகக் கணக்காளர் அலகியவன்ன , இவ்வாறு சந்திரிக்காவுக்கு எதிரான விளம்பரங்களுக்காக மஹிந்த தரப்பு பாரிய தொகையொன்றைச் செலவிட்டுள்ளமை தொடர்பாக சாட்சியமளித்டுள்ளார் .