Breaking News

தப்பு செய்வேன் என எதிர்பார்த்து வாளோடு காத்திருந்தனர் விமர்சகர்கள் பற்றி டோணி நெத்தியடி பேச்சு.

"தவறு நடைபெறும் என எதிர்பார்த்து நிறைய பேர் வாளை தயாராக பிடித்து வைத்திருந்தனர்" என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி தெரிவித்தார். 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. டோணி பொறுப்பாக ஆடி 92 ரன்களுடன் கடைவரை களத்தில் நின்றதால் இந்தியா 247 ரன்களை எட்ட முடிந்தது. பவுலர்கள் மற்றும் ஃபீல்டர்கள் பங்களிப்பால் தென் ஆப்பிரிக்காவை 225 ரன்களில் ஆல்-அவுட் செய்ய முடிந்தது.

டோணி மீது விமர்சனம் போட்டிக்கு பிறகு, பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய டோணியிடம், சமீபகாலமாக அவுக்கு எதிராக எழுப்பப்பட்டுவரும் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. டி20 தொடரை இழந்ததோடு, முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்றதால் டோணி மீது கடும் விமர்சனம் எழும்பியிருந்தது.