சரத்பொன்சேகாவின் மருமகன் தனுன விடுதலை செய்யப்பட்டார்
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவின் மருமகனான தனுன திலகரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்த போது, நிதி மோசடி இடம்பெற்றதாகக் கூறி சரத் பொன்சேகா மற்றும் தனுனவுக்கு எதிராக, ஹைகோப் நிதி மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்தே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



