Breaking News

முறையான வடிகாண் கட்டமைப்பு இல்லாததால் வழமை போல் இம்மாரிக்கும் வெள்ளநீரினால் மூழ்கிக் கிடக்கும் திராய்மடு கிராமம் - படங்கள்


மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட திராய்மடு  கிராம  பகுதியில் உள்ள பல வீதிகள்  மற்றும் தாழ்நில வீட்டு நிலப்பகுதிகள் வெள்ளநீறினால் மூழ்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்   .

திராய்மடு  கிராம பகுதியில்  பல  வீதிகள் பலவருடகாலமாக புனரமைக்கபடாமல்   வெள்ளநீர் வடிந்து செல்வதற்கான   வடிகான்கள் இல்லாமல்  வீதிகள்  காணப்படுவதால்   தற்போது பெய்து வரும் மழையினால் தாழ்நில  பகுதி வீதிகள் ,வீட்டுநிலப்பகுதிகள்  வெள்ளநீறினால் மூழ்கி உள்ளதாகவும்   இப்பிரதேச  மக்கள்  தெரிவிக்கின்றனர் .

இந்த  நிலை ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில்   தாங்கள் எதிர்நோக்குவதாகவும்  தெரிவிக்கின்றனர்

இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் , பாடசாலை செல்லும் மாணவர்கள் , அரச உத்தியோகத்தர்கள் , நோயாளிகள் , கற்பிணி தாய்மார்கள் பல இன்னல்கள் அனுபவித்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர் .

இதேபோன்று  இப்பகுதியில்  உள்ள  கிணற்று நீரினை பாவிக்கமுடியாத நிலையிளும் தமது அன்றாட  கடமைகளை  செய்துகொள்ள முடியாத நிலையில் பெறும் துன்பங்களை அனுபவித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் .

இது தொடர்பாக  பல முறை உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தபோதிலும் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என விசனம் தெரிவிக்கின்றனர் .