Breaking News

சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் விருதும் வழங்கும் நிகழ்வு

சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு அங்கொடை மனநல வைத்தியசாலையில் உளநல வைத்திய நிபுணர்  வைத்தியர்  எம் . கணேசன் தலைமையில்   அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசில்களும் விருதும் வழங்கும்  நிகழ்வு  மட்டக்களப்பு பிரஸ்தாப நிலைய பணிப்பாளர் டி . பிரான்சிஸ் தலைமையில்  உலக நண்பர்களின் தேவைக்கான அமைப்பின் அனுசரணையுடன்  மட்டக்களப்பு கல்லடி  உளவியல்சார் கற்கைகள் நிலையத்தில்  இன்று இடம்பெற்றது .

சர்வதேச உளவியல் தினத்தை முன்னிட்டு   அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டியில்  பங்குபற்றி முதல் இடத்தினை பெற்றுக்கொண்டவர்களுக்கு பண பரிசுகளும்  விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு வர்த்தக ,விவசாய கைத்தொழில் சம்மேளன பணிப்பாளர் நாயகம் வி . ரஞ்சிதமூர்த்தி ,  கௌரவ அதிதிகளாக  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஒ ,சி .ஒ .அசிஸ் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியா தடை இயக்க வைத்திய அதிகாரி திருமதி . மேகலா ரவிச்சந்திரன், 

காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி .சுசிகலா பரமகுருநாதன் , கோட்டமுனை மத்திய மருந்தகத்தின் வைத்திய அதிகாரி செல்வி . டி .கலைச்செல்வி  சிறப்பு விருந்தினர்களாக  உலக நண்பர்களின் தேவைக்கான அமைப்பின் பணிப்பாளர் ஒ . கங்காதரன் , ,மட்டக்களப்பு மேல் நீதி மன்றத்தின்  மொழி பெயர்ப்பாளர்  ஒ .ஆர் . அமான் , 

மட்டக்களப்பு மனநல ஆற்றுப்படுத்தல் கல்லூரியின்  பணிப்பாளர்  எம் . நேசராஜ் , கல்லடி வேலூர் கிராம சேவை உத்தியோகத்தர்  டி . சிவலிங்கம் , மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள் கே . அன்புராஜ் ,ஆர் .பாஸ்கரன் ,ஆகியோர் கலந்துகொண்டனர்