மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா மற்றும் பெற்றோர் தின நிகழ்வும்
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு மார்கழி மாதத்தில் நாடளாவிய ரீதியில் பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .
இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா மற்றும் பெற்றோர் தின நிகழ்வும் இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க தலைவர் திருமதி ஆர் . மதுரநாயகம் தலைமையில் மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இளம் மகளீர் கிறிஸ்தவ சங்க பாலர் பாலசாலை சிறார்களின் ஒளிவிழா கரோல் கீதங்களும் மற்றும் ஒளிவிழா கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இளம் மகளீர் கிறிஸ்தவ சங்கம் உறுப்பினர்கள் , பாடசாலை சிறார்கள் , ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர் .







