அமிர்தகழி கருணை பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வு அதிபர் திருமதி .பிரதீபா தர்ஷன் தலைமையில் இடம்பெற்றது. -படங்கள்
ஆரம்ப நிகழ்வாக சிறார்களினால் நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது .
அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து சிறார்களுக்கு அதிதிகளினால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ஒளிவிழா நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மட்டக்களப்பு எகெட் நிறுவன இயக்குனர் அருட்பணி ஜெரோன் டிலிமா , அமிர்தகழி கப்பலேந்தி அன்னை ஆலய பங்குதந்தை சி .வி .அன்னதாஸ் ,, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் எஸ் . பிரபாசங்கர் , மட்டக்களப்பு மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி .குகதாஸ் மற்றும் அமிர்தகழி பிரதேச முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பள்ளி சிறார்கள் . சிறார்களின் பெற்றோர் ஆகியோர் கலந்துக்கொண்டனர் .













