தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா - படங்கள்
கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் பங்குதந்தை எலக்ஸ் ரொபட் ,அருட்பணி நோட்டன் , அருட்பணி தேவதாசன் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலி இன்று ஒப்புக்கொடுத்தனர் .
மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குதந்தை ஏலக்ஸ் ரொபட் தலைமையில் 29.01.2016 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும், பிராத்தனைகளுடன் திருப்பலிகளும் இடம்பெற்றது .
06.02.2016 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு விசேட ய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து அன்னையின் திருச்சுருவ பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது
ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் விசேட திருவிழா கூட்டுத்திருப்பலியும் , மாணவர்களுக்கு புதுநன்மை ,உறுதிபூசுதல் ஆகிய அருட்சாதனங்கள் வழங்கும் விசேட கூட்டுத்திருப்பலியும் ஆயர் தலைமையில் பங்குதந்தை எல்க்ஸ் ரொபட் ,அருட்பணி நோட்டன் , அருட்பணி தேவதாச ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
திருப்பலியின் பின் அன்னையின் திருச்சுருவ பவணியும் அதனை தொடர்ந்து ஆலய திருவிழா திருநாள் கொடியிறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது .



