Breaking News

வெளிநாட்டு நீதிபதிகள் இல்லை சர்வதேச தொழில்நுட்ப உதவிகள் மாத்திரமே !

கடந்த அரசாங்கத்தின்கீழ் பலதரப்பட்ட மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றை விசாரிக்காமல் விடும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை என்ற அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

எவ்வாறாயினும் போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் யாரும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் மாறாக சர்வதேச தொழில்நுட்ப உதவிகள் மாத்திரம் இவ்விசரணைகளின்போது  பெற்றுக் கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.