2016 அரசாங்க அதிபர் சவால் கிண்ணத்தை மாவட்ட நிலஅளவை திணைக்களம் சுவிகரித்துக்கொண்டது
( என்டன்)
மட்டக்களப்பு மாவட்ட
அரசாங்க அதிபர் சவால் கிண்ணம் 2016
மென்பந்து கிரிகெட் சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில் நிலஅளவை திணைக்கள அணி 03 ஓட்டங்களால்
வெற்றி பெற்று 2016 மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலக அணிகளுக்கிடையில்
நடத்தப்பட்ட 24 அணிகளுக்கிடையிலான அரசாங்க அதிபர் 2016 சவால் கிண்ண பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட்
சுற்றுபோட்டிகள் கடந்த 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது .
கடந்த 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக
இடம்பெற்ற பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்றுபோட்டிகளில் வெற்றி பெற்று
இறுதி போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு மாவட்ட நிலஅளவை திணைக்கள
அணியும் மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலக
அணிக்கும் இடையில் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற
இறுதி போட்டியில் மோதிகொண்டன .
24ஆம் திகதி
ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இறுதி
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆரையம்பதி பிரதேச செயலக அணி களத்தடுப்பில் ஈடுபட்டது .
முதலில் துடுப்பெடுத்தாடிய
மாவட்ட நிலஅளவை திணைக்கள அணி பத்து
ஓவர்கள் முடிவில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய ஆரையம்பதி பிரதேச செயலக அணி பத்து ஓவர்கள் முடிவில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
நடைப்பெற்று முடிந்த 2016 மாவட்ட அரசாங்க
அதிபர் சவால் கிண்ண இறுதி போட்டியில் மூன்றாம்
இடத்தினை இணைப்பு வெற்றி அணிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியும் , நீதிமன்ற
அணியினரும் பெற்றுக்கொண்டனர் .
இரண்டாம் இடத்தினை
ஆரையம்பதி பிரதேச செயலக அணி பெற்றுக்கொண்டது .
2016 அரசாங்க அதிபர் சவால் கிண்ண மென்பந்து கிரிகெட்
சுற்றுபோட்டியின் இறுதி போட்டியில் மாவட்ட
நிலஅளவை திணைக்கள அணி மூன்று ஓட்டங்களால் வெற்றி பெற்று 2016 மாவட்ட அரசாங்க
அதிபர் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது
இந்நிகழ்வில் அதிதிகளாக
உதவி மாவட்ட செயலாளர் எஸ் . ரங்கநாதன், மாவட்ட
செயலக பிரதம கணக்காளர் எஸ் . நேசராசா , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா
. ஆரையம்பதி
பிரதேச செயலாளர் திருமதி என்
.சத்தியானந்தி , உதவி பிரதேச செயலாளர் திருமதி .எல் .பிரசாந்தன் மற்றும் மாவட்டத்தின் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்கலந்துகொண்டனர் .![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Lh1ehD_MKORRwqS1HZXybkYopvcZIzYw18lqDpGbRz5AoflwC6sEMnh5gakuwx4kNJBV6rEa2g3rIqO6XjM33c1z7m_dOAg8ks_3ZL5SuCYRYM4CCDY8VXBbu8JzBGEWVVV9q3F08U7n/s640/DSC_1349.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5Lh1ehD_MKORRwqS1HZXybkYopvcZIzYw18lqDpGbRz5AoflwC6sEMnh5gakuwx4kNJBV6rEa2g3rIqO6XjM33c1z7m_dOAg8ks_3ZL5SuCYRYM4CCDY8VXBbu8JzBGEWVVV9q3F08U7n/s640/DSC_1349.jpg)