மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர்
கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு, இலக்கம் 63/7, 10ஆம் குறுக்கு வீதி பகுதியில் வசித்து
வரும் வேலுப்பிள்ளை புஸ்பாகரன் வயது 51
மூன்று பிள்ளைகளின் தந்தை
நேற்றிரவு மதுபோதையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தால் இடம்பெற்ற கைகலப்பில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில்
உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டி ஹாராச்சி தலைமையிலான குற்றபுலனாய்வு
அதிகாரிகளினால் விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு பொலிசார்
தெரிவிக்கின்றனர் .