Breaking News

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு


(என்டன்)

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில்   மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக    மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இருதயபுரம் மேற்கு, இலக்கம் 63/7, 10ஆம் குறுக்கு வீதி பகுதியில் வசித்து வரும்  வேலுப்பிள்ளை புஸ்பாகரன் வயது 51   மூன்று பிள்ளைகளின் தந்தை  நேற்றிரவு மதுபோதையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தால் இடம்பெற்ற  கைகலப்பில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டி ஹாராச்சி தலைமையிலான  குற்றபுலனாய்வு  அதிகாரிகளினால்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்  .