மட்டக்களப்பு பொலிஸ் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர்களின் சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வுகள்
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸ் திணைக்கள பொலிஸ்
உத்தியோகத்தர்களின் சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வுகள் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது .
தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வை முன்னிட்டு மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தினால்
ஏற்பாடு செய்யப்பட மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலான சித்திரை
புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்
இன்று பிற்பகல் 03.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ் .எஸ் .பி . உபாலி
ஜயசிங்க தலைமையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
காரியாலய வளாகத்தில் இடம்பெற்றது .
இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலைய பொலிஸ்
உத்தியோகத்தர்களினதும் , சிறுவர்களினதும் பல வினோத விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
பிரதம விருந்தினர்களாக கிழக்கு மகான
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க , மட்டக்களப்பு – அம்பாறை பிரதி பொலிஸ்மா
அதிபர் டி .ஐ .ஜி .ஜெயகொட ஆராச்சி, மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ்
அத்தியட்சகர் ரத்நாயக ,மட்டக்களப்பு
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எட்டிஆராச்சி , மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில்
பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன்
மற்றும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரிகளும் , பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களின் குடும்ப
உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்
,