மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறணி கிராமத்தல் இடம்பெற்ற கலாசார புத்தாண்டு நிகழ்வுகள்
( என்டன்)
மண்முனை வடக்கு
பிரதேச செயகமும் கலாசார மற்றும் கலை அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய கலாசார
புத்தாண்டு கலை நிகழ்வுகள் தொடர்பாக எதிர்கால சந்ததியினருக்கு
தெளிவூட்டும் நிகழ்வாக இன்று இடம்பெற்றது
.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார
சபையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கலாசார சித்திரை புதுவருட நிகழ்வு இன்று மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஊறணி கிராமத்தல் மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமயில் இடம்பெற்றது .
இந்நிகழ்வு ஊறணி
அரிய ரெட்ணம் இல்லத்தில் இடம்பெற்ற தமிழ் பாரம்பரிய கலாசார நிகழ்வில் பாரம்பரிய முறைகளின்
ஒன்றான பெரியோறினால் குடும்பத்தாருக்கு மறுத்து நீர் வைத்து நீராடியதன் பின் புத்தாடை
அணிந்து பெரியோர்களை வணங்கி கைவிசேடம் பெற்றுக்கொள்ளும்
நிகழ்வு இடம்பெற்றது .
அதன் பின் பாரம்பரிய உணவுகள்
தயாரிக்கப்பட்டு உணவுகள் பரிமாறப்பட்டதுடன், கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இந்த புத்தாண்டு
சிறப்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் இன்றைய
காலகட்டத்தில் நாங்கள் மிக வேகமாக ஓடிகொண்டிருகின்றோம் .
எம்முடைய கலை
கலாசாரங்களை நாங்கள் மறந்து இளம் சந்ததியினருக்கு சித்திரை புத்தாண்டு என்றால்
என்ன அதிலே நடைபெறுகின்ற சம்பவங்கள் என்ன என்பது கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்
.
இந்த நிலையை இவ்வாறு
விட்டுவிட கூடாது என்பதற்காகவும் , பாரம்பரிய தமிழ் சித்திரை புதுவருடம் என்பதனுடைய
அடிப்படை அம்சங்கள் என்ன , அதனை எவ்வாறு ஊரெல்லாம் கூடி மகிழ்ந்திருக்கின்றது
என்பதனை உணர்த்துகின்ற வகையிலே இந்த தமிழ் சித்திரை வருட புத்தாண்டு நிகழ்வு இடம்பெற்றது
.
நம்முடைய கலாசார உறவு
முறைகளை மறந்து உறவுகளுக்கு கொடுத்த மதிப்பு
இழந்து வருகின்றோம் . இதன் காரணமாக தான்
பல இடங்களில் பல பிரச்சினைகளாக சிறுவர் துஸ்பிரயோகம் , பெண்களுக்கான வன்முறைகள்
இடம்பெற்று வருகின்றது .
இதற்கு எல்லாம்
காரணமாக இருப்பது உறவு முறைகளுக்கு கொடுக்கின்ற மதிப்பை குறைத்தது காண்பது தான் .
எங்களுடைய பாரம்பரிய கிராம கலை கலாசார உறவு முறைகளை மறந்து தனித்தனி மனிதர்களாக
வாழத்தொடங்கி விட்டோம் , அதனை நாங்கள் மாற்றி நல்ல குடும்பமாக , அன்பான குடும்பமாக
, நல்லகிராமமாக , அன்பான சமுதாயமாக மாறி எங்களுடைய கலை கலாசார பண்பாட்டு
விளும்பியங்களை எதிர்கால சந்ததியினரு
அறியப்படுத்த வேண்டும் என்ற வகையில் இந்த கலாசார நிகழ்வு இடம்பெற்றதாக
தெரிவித்தார் .
இந்நிகழ்வில் கிராம
அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ,செயலாளர் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம
சேவை உத்தியோகத்தர்கள் , ,கலாசார அதிகார சபை உறுப்பினர்கள் ,சமுதாய சார்
சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் கிராம மக்கள்
என பலர் கலந்துகொண்டனர் .