இருவர் வெள்ளை வானில் கடத்தல்?
நேற்று (27) மாலை வடமராட்சி கிழக்குகின் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த இரு மீனவர்கள், வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஜோர்ஜ் இராஜநாயகம் மற்றும் வி.மைக்கல் என்ற இருவரையும் வெள்ளை நிற வானில் வந்தவர்கள் வழிமறித்துக் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது .



