Breaking News

விபச்சார வழக்கில் கைதான ஸ்வேதா பாசுவுக்கு பாலிவுட்டில் கிட்டியது ஜாக்பாட்

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசுவுக்கு பாலிவுட்டில் ஜாக்பாட் அடித்துள்ளது

பாலிவுட்டில் மக்தீ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்வேதா பாசு. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்வேதா.

வளர்ந்த பிறகு அவர் தெலுங்கு திரையுலகில் ஹீரோயின் ஆனார். இந்நிலையில் அவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார். தேசிய விருது பெற்ற ஸ்வேதா விபச்சார வழக்கில் சிக்கியது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரண் ஜோஹார் ஸ்வதா பாசுவை தனது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த படத்தில் வருண் தவான், ஆலியா பட் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இது தவிர ஸ்வேதா ஏக்தா கபூர் தயாரிக்கும் இந்தி தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க உள்ளார்