Breaking News

வாழைச்சேனையில் இடம்பெற்ற விபத்தில் மாணவர் உட்பட இருவர் பலி

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில், இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்ற மாணவரும் எதிர்த்திசையில் மோட்டார் சைக்கிளில் வந்த மற்றோர் இளைஞனும் பலியாகியதுடன், மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற மற்றைய மாணவனும் இன்னுமொரு இளைஞனும் படுகாயமுற்றுள்ளநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விபத்தானது மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் கிராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்தியாயவில், நேற்று(29)மாலை 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .