Breaking News

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை செல்வராகவனின் கண்கள் வழியாகக் காண ஆசை

தமிழில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வைத் தவிர ரெஜினாவிற்கு வேறு எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவுக்கு வந்தது. செல்வராகவன் இவ்வளவு சீக்கிரம் ஒரு படத்தை முடித்து விட்டாரா? என்று கோலிவுட்டினர் ஆச்சரியத்தில் மூழ்க, செல்வராகவன் ஒரு சூப்பர் இயக்குநர் என்று அவருக்குப் பின்வருமாறு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் ரெஜினா.

இவரின் படங்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு காட்சியை அவர் எப்படி படம் பிடிப்பார் என்பதை நம்மால் எப்போதுமே கணிக்க முடியாது. சொல்லப் போனால் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்னும் திகில் படத்தை அவரின் கண்கள் வழியாகப் பார்க்க, நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார்.