தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 11355 மாணாவர்கள் தோற்றியுள்ளனர்.
(என்டன்)
2016 ஆம்
ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்றது .
இன்று நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 350701 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
இதில் தமிழ் மொழி மூலம் 89847 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
இந்த பரீட்சைக்காக நாடலாவியல்
ரீதியில் 2954 பரீட்சை மத்திய நிலையங்களும் 494 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன .
2016 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு
மாவட்டத்தில் 05 வலயத்திலும்
11355 மாணாவர்கள் தோற்றிவுள்ளதுடன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு ,
மட்டக்களப்பு மத்தி ,கல்குடா ,பட்டிருப்பு ,மண்முனை மேற்கு ஆகிய
05 வலயத்தில் 97 பரீட்சை நிலையங்களிலும் 13 இணைப்பு
பரீட்சை நிலையங்களிலும் இப்
பரீட்சைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.